நாமக்கல் மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் பல்வேறு பாடங்களில் 737 மாணவ, மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு கல்வித் துறையினரால் ப்ளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 142 மேல்நிலைப்பள்ளி மானவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 91.6 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாநிலத்தில் முதல் இடத்தையும், ராசிபுரம் எஸ்.ஆர்.வி பள்ளி மாநிலத்தில் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்து. மாவட்டம் முழுவதும் இயற்பியல் பாடத்தில் 72 பேரும், வேதியியலில் 75 பேரும், கணித பாடத்தில் 535 பேரும், உயிரியலில் 49 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஆறு பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இச்செய்தியின் ஆங்கிலப் பதிப்பு இங்கே…
Popularity: 91% [?]







