கரூர் அருகே உள்ள கீரனூர் மீனாட்சி புரத்தை சேர்ந்த ராஜமூர்த்தி (24) - பரிமளா (22) தம்பதியினருக்கு கடந்த 4-ம் தேதி குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர், காரணம் அந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லாததுதான். (இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது).
இக்குழந்தையைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருத்தத்தில் கண்ணீர் வடித்தவன்னம் உள்ளனர். இதனை சரி செய்ய நவீன மருத்துவத்தில் ஏதேனும் வழி உண்டா என விசாரித்தபொழுது கரூர் மருத்துவர்கள் அக்குழந்தையை சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இந்த குழந்தையின் பெற்றோர்கள் கூலி வேலை செய்து வருவதால், குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க தங்களுக்கு போதிய வசதியில்லை என மாவட்ட ஆட்சியாளரிடம், தங்களது குழந்தைக்கு அரசு சிகிச்சை அளிக்க உதவ வேண்டி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.
Popularity: 100% [?]







