சென்னையில் இன்று மாலை சில இடங்களில் மட்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கோயம்பேடு, தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில், இன்று மாலை 5 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தி.நகர் பகுதியில் வணிக வளாகங்களில் பணியில் இருந்தவர்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பல அடுக்கு மாடிகளில் இருந்து அவசரமாக கீழே இறங்கி ஓடி வந்தனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்தமான் தீவுகளில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியிருந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Popularity: 32% [?]






