பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நேற்று (27/02/2008) இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 72.
சிறுநீரகக் கோளாரால் பாதிக்கப்பட்டிருந்த சுஜாதா, சமீபத்தில் உடல்நிலை மோசமானதால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு 9:30 மணியளவில் சுஜாதாவின் உயிர் பிரிந்தது. இவருக்கு, இரு மகன்கள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர்.
இவரது உடல் நிலை சரியில்லை என கேள்விப்பட்டதுமே மகன்கள் இருவரும் சென்னை விரைந்தனர். இவரது இறுதிச் சடங்குகள் நாளை (29/02/2008) நடைபெறவுள்ளன…
Popularity: 91% [?]







